வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து ஓமந்தைப் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த டிப்பர் ரக வாகனமே பாடசாலை விட்டு வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த ஆசிரியை மீது மோதியுள்ளது.
விபத்தில் ஆசிரியை படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியா புதிய சினக்குளம் பாடசாலையில் கல்விகற்பிக்கும் ஒரு வயது குழந்தையின் தாயான சுகன்யா அகிலன் (வயது 38) என்பவரே படுகாயமநை்துள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை டிப்பர் வாகனத்தின் உரிமையாளர்களான புகையிரத பாதை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தரவேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸாருடன் முரண்பட்டுக்கொண்ட நிலையில் சம்பவ இடத்திற்கு கலவரத்தடுப்பு பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
Post a Comment