Home » , , , , » ஈச்சளவக்கை அரசினர் தமிழ் கலவன் பாடாசாலை கட்டிட அடிக்கல் நாட்டு விழா

ஈச்சளவக்கை அரசினர் தமிழ் கலவன் பாடாசாலை கட்டிட அடிக்கல் நாட்டு விழா

Written By Namnilam on Wednesday, February 26, 2014 | 2:44 PM

மன்னார் மடு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள ஈச்சளவக்கை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஜப்பானிய தூதரகத்தின் அனுசரணையோடு பிளான் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் ரூபாய் 11.2 மில்லியன் செலவில் அமைக்கப்படவுள்ள பாடாசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று 25-02-2014 செவ்வாய்க் கிழமை காலை 10:00 மணியளவில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.5248


நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பா.டெனிஸ்வரன் அவர்களும், வடக்கு மாகாண கல்வி விளையாட்டு கலாசார அமைச்சர் கௌரவ த.குருகுலராஜா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஜப்பானிய தூதரகத்தின் துணைச் செயலாளர் அவரோடு பிளான் ஸ்ரீ லங்காவின் வதிவிடப் பிரதிநிதி அவர்களும், மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு ஏ.ஜே.குரூஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


நிகழ்வைத் தொடர்ந்து ஈச்சளவக்கை கிராம இளைஞர்களோடு உரையாடிய போக்குவரத்து அமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி அவர்களது விளையாட்டு மைதானத்தையும் பார்வையிட்டு அதனை அபிவிருத்தி செய்து தருவதாகவும் உறுதிமொழி வழங்கினார்.


52465247

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger