யாழ்.வட்டுக்கோட்டை மூளாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆடுகளை திருடச் சென்ற தந்தை மற்றும் மகனை அப்பகுதி மக்கள் திங்கட்கிழமை (24) இரவு மடக்கிப்பிடித்துள்ளதுடன் அவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இருவரும் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் மூளாய் தெற்கு சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.துலராஜா (68), துலராஜா செல்வநிதி (31) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment