ஐக்கிய தேசியக் கட்சியினர் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையின் போது கைத்துப்பாக்கியை தான் கொண்டு செல்லவில்லை என்று ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மத்தல விமான நிலையம் மற்றும் மஹிந்த ராஜபக்ச துறைமுகம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து ஆராய்வதற்காக நேற்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற குழு ஒன்று அங்கு சென்றிருந்தது.
இதன்போது மத்தல விமான தளத்தில் வைத்து குறித்த குழுவினர் அச்சுறுத்தப்பட்டனர். இதனையடுத்து துறைமுகத்துக்கு சென்றவேளையில் அங்கு அவர்கள் மீது அழுகிய முட்டைகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்போது ஹம்பாந்தோட்டை மாநகர முதல்வாரன ஆளும் கட்சியின் இராஜ் பெர்ணான்டோ கைத்துப்பாக்கியுடன் இருந்ததாக ஐக்கிய தேசியக்கட்சியினர் குற்றம் சுமத்தியிருந்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பத்திரிகைகளிலும் அவர் கைத்துப்பாக்கியுடன் ஓடி வரும் காட்சி பிரசுரிக்கப்பட்டிருந்தது. எனினும் தாம் ஒருபோதும் துப்பாக்கியை கொண்டு செல்லவில்லை என்று இராஜ் குறிப்பிட்டுள்ளார்.
நிலைமையை கட்டுப்படுத்த அங்கு செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவே தம்மை கேட்டுக்கொண்டதாக இராஜ் தெரிவித்துள்ளார்.
Post a Comment