ஒரு மூதாட்டி காய்கறிகள் விற்றுக்கொண்டிருந்தார். அந்த மூதாட்டியை ஒரு சிறுவன் உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.சிறிது நேரம் கழித்து அவர் அருகில் சென்ற சிறுவன் பாட்டி இந்தாங்க இந்த காச வச்சுக்கோங்க என்று ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டினான். அதற்க்கு அந்த பாட்டி காசெல்லாம் வேணா ராசா ஏதாது வாங்கிக்கோ என்று பதில் சொல்ல அந்த சிறுவன் ஏதோ யோசித்துக் கொண்டே இருந்தான்.
சற்று நேரம் கழிந்த பின் பாட்டி எனக்கு ஒரு முத்தம் தா என்று கேட்க சற்றும் யோசிக்காமல் அந்த பாட்டி அந்த மழலையின் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டார்.
அந்த சிறுவன் மறுபடியும் அவரிடம் பத்து ரூபாய் நோட்டை நீட்டினான். வேணாம் ராசா ஏதாது வங்கிக்கோனு சொல்ல அந்த சிறுவன் அதான் உன்னிடம் இருந்து முத்தத்தை வாங்கிவிட்டேனே என்றான்.
இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத அந்தபாட்டி அந்த சிறுவனை கட்டி அனைத்து சிறு துளி கண்ணீர் சிந்தினார். அந்த சிறுவன் தந்த பணம் பாட்டியின் முத்தத்திற்கான பரிசல்ல... அவரின் உழைப்பிற்கான மதிப்பு.
Post a Comment