ஆறாவது ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கி ஏகப்பட்ட சர்ச்சைகளுக்குள் மாட்டிக் கொண்டு சீனிவாசன் விழி பிதுங்கி நிற்கும் நிலையில், அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை தனது முதலாவது ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணி 7வது ஐபிஎல் போட்டியில் விளையாட முடியாத நிலையி்ல்தான் முதலில் இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் புண்ணியத்தால் புது வாழ்வு கிடைத்து தொடரில் பங்கேற்றுள்ளது.
இதையெல்லாம் தாண்டிப் பார்த்தால் இருக்கும் அணியிலேயே பெஸ்ட் அணியாக சென்னையைத் தாராளமாக சொல்லலாம்.ஸ்டார்கள் இல்லாவிட்டாலும் கடந்த காலங்களில் சென்னையின் நீக்க முடியாத தூண்களாக திகழ்ந்த மைக் ஹஸ்ஸி, அல்பி மார்க்கல் ஆகியோர் இப்போது அணியில் இல்லை. இருந்தாலும் கூட அணி வலுவாகவே உள்ளது. அதேபோல மேற்கு இந்தியதீவுகளைச் சேர்ந்த சாமுவேல் பத்ரியின் வருகை அணியின் சுழற்பந்து வீச்சை பலமாக்கியுள்ளது.
மறுபக்கம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜார்ஜ் பெய்லியை கேப்டனாகக் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் வீரேந்திர ஷேவாக் இடம் பெற்றுள்ளார். இவர் இதுவரை நல்ல பார்முக்கு வரவில்லை என்ற போதிலும் திடீரென பார்முக்கு வந்து விட்டால் சிக்கல்தான். அதேபோல மிட்சல் ஜான்சன் அணியில் இருக்கிறார். அதிரடியான வேகப் பந்து வீச்சாளர் மிட்சல்.
மொத்தத்தில் பஞ்சாபை விட சென்னையின் கையே ஓங்கியுள்ளது. இதை வைதது ஓங்கியடிச்சா ஒன்றரை டன் வெயிட்டா என்று வெயிட்டாக ஆடினால் பஞ்சாபை சட்னியாக்கி சாதிக்கலாம்... பார்க்கலாம்.
Post a Comment