முல்லைத்தீவு மாங்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் பளை நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலில் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக வடக்கு மார்க்கத்தினூடான இரு ரயில் சேவைகள் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமடைந்ததாக மாங்குளம் ரயில் நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர ரயிலும், கொழும்பிலிருந்து பளை நோக்கி பயணித்த ரயிலுமே தாமதமாகியுள்ளன. எவ்வாறாயினும் இன்று காலை தொடக்கம் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment