எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி நாடு தழுவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படாவிட்டால் பாரியளவில் போராட்டம் நடத்த நேரிடும் என தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் பஸ் கட்டணங்கள் 20 வீதத்தினால் உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் 12 வீதம் கட்டணம் உயர்த்தப்பட வேண்டுமென கோரப்பட்ட போதிலும், 6 வீதமே உயர்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.டீசல் விலை உயர்த்தப்படாத போதிலும் ஏனைய அனைத்து செலவுகளும் உயர்வடைந்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment