கோண்டாவிலில் மின்சாரத்தாக்குதலிற்கு இலக்காகி இளைஞர் பலியான சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பற்றது. இதில் சுன்னாகத்தைச் சேர்ந்த திரவியநாதன் ரனிஸ்ரன் வயது 26 என்பரே மரணமானவராவார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆலயத்தில் ஓவிய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே மின்சாரத்தாக்கத்திற்கு இலக்காகி மரணமானார். இது தொடர்பில் கோப்பாய் காவல்த்துறையில் முறையிட்டதையடுத்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment