கேகாலை பிரதேசத்திலுள்ள திரையரங்கு ஒன்றில் தனியாக திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த 14 வயது பாடசாலை மாணவியொருவரை திரையரங்க முகாமையாளர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக முகாமையாளரும் மற்றுமொரு திரையங்க ஊழியரையும் கேகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நண்பியுடன் இம்மாணவி திரையரங்கிற்கு வந்துள்ளார். நண்பி தனது காதலனுடன் திரையரங்கின் மேல் மாடி பெல்கனியில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த போது இம்மாணவி தனியாக கீழ் பகுதியில் தனியாக திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளளார்.
மாணவி தனியாக இருந்ததைக் கண்ட முகாமையாளர் திரையரகங்கு ஊழியரொருவரை அனுப்பி மாணவியை அழைத்து வரும் படி கூறியதாகக் கூறி மாணவியை ஏமாற்றி வரவழைத்து இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் இருவரையும் இன்று 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி கேகாலை நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவி வைத்திய பரிசோதனைக்காக கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Post a Comment