Home » » கொக்குவில் பகுதியில் வெடி பொருள்கள் மீட்பு

கொக்குவில் பகுதியில் வெடி பொருள்கள் மீட்பு

Written By Namnilam on Friday, May 9, 2014 | 11:45 AM

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாவடி தெற்கு, கொக்குவில் பகுதியில் உள்ள உடைந்த வீட்டின் இடிபாடுகளை அகற்றிய வேளையில் அதனுள் புதையுண்ட நிலையில் ஒரு தொகுதி வெடிபொருள்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. வீட்டின் இடிபாடுகளை அகற்றிய வேளையில் நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையில் இருந்து வயர்கள் மற்றும் சில பொருட்கள் வெளி வருகின்றமையைக் கண்டதும் வீட்டின் உரிமையாளர் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்கள்.

சுன்னாகம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சப் இன்ஸ்பெக்டர் சமிரா கருணரத்தினா தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் உரிய இடத்தை பார்வையிட்டு அது சம்பந்தமாக மல்லாகம் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தனர். மல்லாகம் நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இராணுவத்தினரின் பொறியியல் பிரிவின் உதவியுடன் நிலத்தின் கீழ் புதையுண்டு கிடந்த கண்ணிவெடிகள் மற்றும் வெடிப் பொருள்களை மீட்டு அவற்றை நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக அழித்தனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger