Home » » சார்க் நாடுகளின் எட்டுத் தலைவர்களையும் தனித் தனியாகச் சந்திக்கிறார் பிரதமர் மோடி

சார்க் நாடுகளின் எட்டுத் தலைவர்களையும் தனித் தனியாகச் சந்திக்கிறார் பிரதமர் மோடி

Written By Namnilam on Tuesday, May 27, 2014 | 11:07 AM

இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, இன்று சார்க் நாடுகளின் எட்டுத் தலைவர்களையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்புக்கான கால அட்டவணையை இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. இதன்படி, முதலாவதாக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீட் கர்சாயை, காலை 9.30 மணியளவில் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார். அதையடுத்து, மாலைதீவு அதிபர் அப்துல் கயூமை காலை 10.05 மணிக்கு அவர் சந்திப்பார். இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு காலை 10.30 மணியளவில் இடம்பெறும்.


அதையடுத்து. பூட்டான் பிரதமர், மொறிசியஸ் பிரதமர், நேபாள பிரதமர் ஆகியோரையும் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு மதியம் 12.10 மணியளவில் இடம்பெறும். அதையடுத்து, பங்களாதேஷ் சபாநாயகருடன் சந்திப்பு இடம்பெறும். இந்தச் சந்திப்புகளில் ஆப்கானிஸ்தான் அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்புகளுக்கு மட்டும் 35 நிமிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்புகளுக்கு 25 நிமிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா அதிபருடனான சந்திப்பின் போது, மீனவர்களின் பிரச்சினை மற்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி நிலையான அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவது ஆகிய இரண்டு விடயங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger