தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து மூதாட்டியில் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டதாக
அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் புத்தூர் கிழக்கு ஆவரங்கால் பகுதியை சேர்ந்த மகேஷன் பசுபதி வயது(70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில், குறித்த வயோதிப பெண் நேற்று முன்தினம் முதல் காணமற்போயுள்ளார் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவில் குறித்த மூதாட்டியின் கணவரால் முறைப்பாடு பதிவுசெய்யபட்டிருந்தது.
நேற்றுக் காலை குறித்த மூதாட்டியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தற்கொலையா அல்லது கொலைசெய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தோட்டக்கிணறு ஒன்றில் மூதாட்டியின் சடலம்.
Written By Namnilam on Saturday, May 3, 2014 | 9:47 AM
Labels:
தாயகம்
Post a Comment