தமிழில் கேடி மற்றும் நண்பன் படங்களில் நாயகியாக நடித்த நடிகை இலியானா தெலுங்கிலும் ஹிந்தியிலும் மிகப் பிரபலமானவர். இவர் நேற்று மும்பாய் போக்குவரத்துத்துறை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி வாகனத் தகட்டை பொருத்திய காரில் பயணித்தமையே இவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணமென தெரியவந்துள்ளது. இலியானாவும் அவரது மூன்று நண்பர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
வருண் தவான் ஹீரோவாக நடித்துவரும் மெயின் தேரா ஹீரோ எனும் இந்திப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
என்னம்மா இலியானா? இப்பிடி போலிகளை பயன்படுத்தலாமா?
Post a Comment