தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வந்த மச்சான்ஸ் நடிகை தற்போது சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். எதிலாவது சாதிக்கவேண்டும் என்ற துடிப்போடு இருக்கிற நடிகை அரசியலில் களமிறங்க தீவிர முயற்சி எடுத்தார். ஆனால், அது கைகொடுக்கவில்லை.
ஆகையால், தற்போது ஏதாவது ஒரு விளையாட்டு வீராங்கனையாக மாறிவிட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக குத்துச் சண்டை கற்று வருகிறாராம். இந்தியாவுக்கு குத்துச்சண்டை மூலமாக ஏதாவது ஒரு மெடல் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம்.
இப்போது பயிற்சி முடிந்துவிட்டதால் கூடிய சீக்கிரமே சென்னையில் ஒரு குத்துச்சண்டை போட்டியை நடத்தி தனது திறமையை நிரூபிக்க உள்ளாராம். அந்த போட்டியில் கலந்துகிட்டு அவரை ஜெயிக்கிறவங்களுக்கு நிறைய பரிசுகளையும் கொடுக்கப் போறாராம்.
Post a Comment