Powered by Blogger.
Latest Post

Written By Namnilam on Monday, October 6, 2014 | 8:42 PM

புற்று நோய் பாதிப்பை குறைக்கும் முயல் கறி

அன்றாட மாறிவரும் வாழ்க்கை முறையில் நம்மை பல வித நோய்களும் எளிதாக தொற்றிக் கொள்கிறது.வாழ்க்கை முறைகளுக்கு ஏற்றவாறு நாம் நம் உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்வது அவசியமாக இருக்கிறது.

நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்தாத போது 60 வயதில் வரவேண்டிய இரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய்கள் போன்றவை 25 வயதிலேயே தொற்றிக் கொள்கிறது. எனவே பலர் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் குறைவாக உள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொள்ள விரும்புகின்றனர். இறைச்சியில் அனைத்து சத்துகளும் வளமாகவே உள்ளது. இருப்பினும் அனைத்து இறைச்சியிலும் கொழுப்புக்கள் குறைவாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் முயல் கறியில் இன்றைய கால தலைமுறையினர் எதிர்பார்க்கும் வகையிலான அத்தியாவசிய சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் முயல் கறியில் கொலஸ்ட்ராலானது மிகவும் குறைவாக உள்ளது. எனவே எடையை பராமரிக்க நினைப்போர் முயல் கறியை அச்சமின்றி சாப்பிடலாம்.

குடல் பாதை பிரச்சனை
முயல் கறியில் எளிதில் செரிமானமாகக்கூடிய புரோட்டீன்களைக் கொண்டுள்ளது. இதனால் இதனை உட்கொண்ட பின்னர் எந்த ஒரு இம்சையையும் சந்திக்கமாட்டோம்.
ஆகவே கடுமையான குடல் பாதை பிரச்சனை உள்ளவர்களும் இதனை சாப்பிடலாம்.

உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சோடியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளக்கூடாது.
ஆனால் முயல் கறியில் சோடியம் குறைவாக இருப்பதால், இதனை அத்தகையவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.

சீரான மெட்டபாலிசம்
முயல் கறியை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால், உடலின் மெட்டபாலிசமானது சீராக இருக்கும். இதனால் உடலில் கொழுப்புக்களானது தங்குவதைத் தடுக்கலாம்.

இதய நோய்
மற்ற கறிகளுடன் ஒப்பிடும் போது முயல் கறியில் செரிவான கொழுப்பு அமிலங்கள் குறைவாகவும், இதயத்தை பாதிக்காத கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவும் இருப்பதால், இதய நோய் உள்ளவர்கள் எவ்வித பயமும் இல்லாமல் முயல் கறியை சாப்பிடலாம்.

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்
மற்ற இறைச்சியுடன் ஒப்பிடும் போது முயல் இறைச்சியில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது.

புற்றுநோய்
முக்கியமாக புற்றுநோய் உள்ளவர்கள், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது, முயல் கறியை சாப்பிட்டு வந்தால், அதனால் ஏற்படும் அபாயத்தை மெதுவாக குறைக்க முடியும்

Written By Namnilam on Sunday, October 5, 2014 | 1:27 PM

தீபாவளிக்கு வருகிறதா ஒரு ஊர்ல ரெண்டு ராஜா...?


கண்ணன் இயக்கியிருக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திட்டமிட்டபடி அக், 2 இன்று வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் படவெளியீட்டை தீபாவளிக்கு தள்ளி வைத்திருப்பதாக கண்ணன் கூறினார்.
விமல், சூரி, ப்ரியா ஆனந்த் நடித்துள்ள இந்தப் படம் சமீபத்தில் தணிக்கைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு யு சான்றிதழ் கிடைத்தது. அக்டோபர் 2 படம் வெளியாகியிருக்க வேண்டும்.
ஆனால் பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாக கண்ணன் தெரிவித்தார். தீபாவளி அல்லது அதற்கு மேலும் படவெளியீடு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா காமெடி பின்னணியில் தயாராகியுள்ளது. படத்தின் முதல்பாதி முழுக்க ரயிலில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. இமான் இசையில் லட்சுமி மேனன் ஒரு பாடல் பாடியுள்ளார். மைக்கேல் ராயப்பன் படத்தை தயாரித்துள்ளார்.

Written By Namnilam on Monday, September 29, 2014 | 8:01 PM

காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடலாம்?

காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடித்தால் தான் பலருக்கும் பொழுதே விடுகிறது.ஆனால் இது ஆரோக்கியமானது தானா? என்ற கேள்வி பலரது மனதிலும் எழும். நம் உடல் ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன
சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.
இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டும்.

                                                                  தண்ணீர்
ஒருநாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணிநேரத்துக்குள் குடிக்க வேண்டும்.வெந்நீரை விட குளிர்ந்த நீரை குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.வெறும் தண்ணீருக்கு பதிலாக வெந்தயத் தண்ணீர் கூட அருந்தலாம்.
வெந்தயத்தை முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது.
                                    ஆரோக்கியம் தரும் சாறுகள்
* அல்சர் நோயாளிகளுக்கு ஏற்ற பானம் அருகம்புல் சாறு தான், ஆனால் பக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி நம் உடலுக்கு உகந்தது அல்ல.
அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.
* வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும்.
கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும்.
* இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.
* தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.
இதில் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்று நோய்களுக்கும் மிகவும் சிறந்தது.
          

                                                        இளநீர்    
 இயற்கை தந்த வரப்பிரசாதங்களில் ஒன்று இளநீர், உடலுக்கு நன்மை தந்தாலும் வெறும் வயிற்றில் குடிக்க கூடாது.
ஏனெனில் இதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், வயிற்றில் புண்கள் ஏற்படலாம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கூட அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
மேலும் வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம்.
        
                                                  நீராகாரம்
காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவதை இன்றளவும் கூட கிராமங்களில் பார்க்கலாம். இதன் மூலம் உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது.
                 

Written By Namnilam on Wednesday, September 24, 2014 | 9:28 PM

          தேன் பற்றிய சுவையான மருத்துவக்                                                  குறிப்புக்கள்




தேன் ஓர் இனிய உணவுப் பொருள் ஆகும்மருத்துவ குணமும் கொண்டது.

1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும்தேனும்வெந்நீரும் கலந்துஅருந்தினால் பருத்த உடல் மெலியும்ஊளைச் சதை குறையும்உடல் உறுதிஅடையும்.

2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்திகுமட்டல்ஜலதோஷம்தலை வலி குணமாகும்.

3. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம்அடையும்.


4. தேனும், முட்டையும், பாலும் கலந்துசாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாஉபாதையிலிருந்து தப்பலாம்.

5. இருமல்சளித் தொல்லை நுரையீரல்தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக்கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்துசாப்பிட இருமல் மட்டுப்படும் சளித்தொல்லை குறையும்.

6. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சமஅளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டார் இருதய நோய்கள் தீரும்.

7. உடம்பில் இரத்தத் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும்பாலும்சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

8. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக் காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிடகீழ் வாதம்போகும்.

9. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால்வலி நீங்கும்.

10. தேனோடு பாலோஎலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த்தொந்தரவுகள் குறையும்கல்லீரல் வலுவடையும்.

11. அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுஸ் இஞ்சிச்சாறு கலந்து காலைநேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வரஇரத்த சுத்தியும்இரத்த விருத்தியும்ஏற்படும்நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

12. முருங்கைக்காய்ச் சாறுடன் சம அளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவைநீங்கும்.

13. தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்தேன் மூலம் எல்லாப்பிணிகளையும் நீக்க முடியும்அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனைநாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராதுஆனால்,தேன் சுத்தமான தேனாக இருக்க வேண்டும்.

14. நெல்லிக் காய்களைத் துண்டு துண்டாக்கி தேன்ஏலக்காய்ரோஜா இதழ்கள்சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும்பின்பு ஒரு ஸ்பூன்வீதம் காலையும்மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல்குணமாகிவிடும் என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர்தினமும் தேனை அருந்த வேண்டும்நாற்பது வயதைக் கடந்தவர்கள்கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

Written By Namnilam on Tuesday, September 23, 2014 | 9:57 PM

‘லிங்கா’ கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்…!


இந்த ஆண்டில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக இருந்து வரும் படங்களில் ‘லிங்கா’வும் ஒன்று. ‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி படமான ‘கோச்சடையான்’ படத்தால் அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்ல மற்ற ரசிகர்களுக்கும் மிகப் பெரிய திருப்தி ஏற்படவில்லை. ரஜினியை ரஜினியாக மட்டுமே அவர்கள் பார்க்க விரும்பினார்கள்.
அதைப் புரிந்து கொண்ட ரஜினிகாந்த் உடனடியாக ரசிகர்களுக்காக தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் ‘லிங்கா’ படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையைமப்பில் படம் உருவாகி வருவதால் நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் படம் திருப்திப்படுத்திவிடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்து கொண்டு வந்தது. கடந்த வாரம் ‘ஐ’ இசை வெளியீட்டில் ரஜினிகாந்த் கலந்து கொண்டதால் சில நாட்கள் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார்கள். அதன் பின் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன் ‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பமானது.
ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரான லீ விடேகர் தலைமையில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ‘டை ஹார்ட், ஃபாஸ்ட் பைவ்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்துக் கொடுத்தவர்தான் லீ விடேகர். அதனால் ‘லிங்கா’ படத்தின் சண்டைக் காட்சிகள் ரஜினிகாந்த் ஸ்டைலுடன் இன்னும் பலமாக இருக்கும்படி படமாக்கப்பட்டு வருகிறது.
கண்ணைக் காக்கும் மருத்துவக் குறிப்புக்கள்

உடம்பின் ஜன்னல் கண்கள் உலகையே நாம் கண்களால் தான் பார்க்கின்றோம்கண் பராமரிப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக இன்றியமையாத ஒன்று அதற்கான சில தகவல்கள்
உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவத்தல் இவற்றிற்கு கருஞ்சீரகத்துடன் நல்லெண்ணைய் சேர்த்து காச்சி அந்த எண்ணெயை கண்ணில் மேலும் கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண் எரிச்சலும் கண் சிவப்பும் மாறும்.
பொன்னாங்கண்ணி கீரையை தினமும் காலையில் பச்சையாக மென்று சாப்பிட்டி ஒரு டம்ளர் பாலும் பருகி வந்தால் கண்பார்வை தெளிவு பெறும்.
வெள்ளை சீனி, உப்பு மற்றும் அளவுக்கு மீறிய பால் மற்றும் மாவுப் பொருள்  போன்ற உணவு பொருட்கள் கண்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவைகள் இவற்றை இயன்ற அளவு குறைத்து கொள்வது நல்லது.
காரட், பொன்னாங்கண்ணி, எலுமிச்சை, பலா, மா, கொத்தமல்லி, பப்பாளி, தக்காளி, முருங்கை, கருவேப்பிலை, சாத்துக்குடி, திராட்சை, நெல்லி, வெள்ளரி, பேரிட்சை, இளநீர் போன்ற உணவுகள் சாப்பாட்டில் அளவுடன் சேர்த்தல் கண்ணிற்கு நலம்.
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து தூளாக்கி சுடுநீரில் தேன் கலந்து சாப்பிட்டால் கண்ணெரிச்சல் குணமாகும்.
குங்குமப் பூவை தாய்ப்பாலுடன் சேர்த்து குழைத்து கண்களின் மேல் பற்றுப் போட்டால் கண்நோய் விரைவில் குணமாகி விடும்.
கண்களின் இமைகளைச் சுற்றி ஏற்படும் கட்டிகளைக் கரைக்க துளசி இலைச்சாற்றைப் பூசினால் கட்டிகள் கரைந்து விடும்.
கண்கள் குளிர்ச்சி பெறுவதற்கு வெண்டைக்காயை உணவில் அடிக்கைடி சேர்த்து வரலாம் அது மட்டுமல்லாமை மூளையும் பலமடையும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் கண்நோய் குறைய நெல்லிக்காய் சாற்றைப் பிளிந்து பருகுவதற்குக் கொடுத்து வந்தால் விரைவில் குணமாகி விடும்.
மூடிய கண் இமைகளின் மேல் பன்னீரை பஞ்சில் நனைத்து வைத்து வந்தால் இமை கருமை நிறமாக மாறும்.
கண் குறித்த முக்கியமான விடயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். அது மட்டும் இல்லாமல் நேரத்திற்குத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கு புத்துணர்ச்சியையும் தரும்.
கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்க வெள்ளரி துண்டுகளை வட்டமாக நறுக்கி கண்கள் மேல் வைத்து எடுக்கவும்.
கண்களில் அதிகமாக எரிச்சல் இருந்தால் கண்களை மூடிக்கொண்டு கண்களுக்கு மேல் சிறிது விளக்கெண்ணெயை ஊற்றி மெதுவாக மசாஜ் செய்யவும். கண்கள் குளிஎச்சி அடையும்.
நந்தியாவட்டைப் பூவை நன்கு சுத்தமான நீரில் கழுவி கண்களின் மேல் வைத்தால் கண்கள் பொலிவு பேறும்.
வெண்ணையுடன் கொத்தமல்லி இலைச் சாற்றை பிளிந்து கண்களின் மேல் பூச்சாகப் பூசினால் கருவளையம் விரைவில் மறைந்து விடும்.
கண்களைக் காக்கும் உணவுகள்:
உணவில் பொன்னானங்கண்ணிகீரை அதிகமாக சேர்த்துக்கொண்டால் கண்கள் நன்றாகவும் பிரகாசமாகவும்   இருக்கும்.
கண்கள் நல்ல அழகையும், ஒளியையும் பெற வேண்டுமானால் தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சுத்தமான தேனில் நனைத்து சாப்பிடவும்.
தினமும் பச்சையாக ஒரு கரட் சாப்பிட்டால் கண்பார்வை தெளிவு பெறும்..
தினமும் காலை வெறும் வயிற்றில் பாதாம் பருப்பு சாப்பிட்டுவந்தால் கண்களில் இருந்து நீர் வடிவதைத் தடுக்கலாம்.
நாவல்பழம்  ஜூஸ் செய்து சாப்பிடுவது கண்களுக்கு நன்கு குளிர்ச்சி கிடைக்கும்.
கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம் நீங்க வாழைப்பூ வறை மற்றும், வெள்ளரிக்காய் சலாட் செய்து சாப்பிடலாம். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்
“கண்களைக் காப்போம் கழிப்புடன் வாழ்வோம்”

மூட்டுவலிக்குரிய மருத்துவக் குறிப்புக்கள்


ஒருவருக்கு முதுமை வந்துவிட்டால் அங்கே மூட்டு வலியும் சேர்ந்து ஆரம்பித்த விடுகின்றது.
இது உடம்பில் இடுப்புமூட்டு, கால்மூட்டு, தோள்பட்டை, கழுத்துப் போன்ற பகுதிகளில் இந்த வலியை உணர முடியும்.
இந்த மூட்டு வலிக்கு முதன்மைக் காரணமாக முதுமை இருந்தாலும் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பநிலை, அதிக நேரம் நடத்தல் அல்லது அதிக நிறை கொண்ட பொருட்களைபத் தூக்குதல், அதிகமாக உடற்பயிற்ச்சி செய்தல், அல்லது எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பது நீண்ட நாட்களாக உடல் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பது, எலும்பு மூட்டுக்களில் ரத்தம் உறைந்து போய் காணப்படுவது ஆகியவையும் பிற காரணங்களாக அமைகின்றன.
நீங்களும் மூட்டு வலியால் அவதிப்படுபவரா? அந்த அவஸ்தையில் இருந்து தப்பிக்க வேண்டுமா அதற்குச் சிறந்த மருத்துவக் குறிப்புக்கள்.
  • கரட், பீட்ரூட் ஆகியவற்றை பச்சையாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
  • காய்கறிச் சூப் அசைவ சூப் அடிக்கடி சாப்பிடுங்கள்.
  • எந்த வாழைப்பழமாக இருந்தாலும் அதை தினமும் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
  • கல்சியம் அதிகம் உள்ள பால் சார்ந்த பொருட்கள் மற்றும் மீன் உணவை அடிக்கடி எடுத்துக் கொள்ளங்கள்.
  • நடைப்பயிற்சி அவசியமான ஒன்றுதான் ஆனால் அது அளவோடுதான் இருக்க வேண்டும். அதேபோல் அளவான உடற்பயிற்சி செய்வதும் நன்மை தரும்.
  • காரம் நிறைந்த எண்ணெய்யில் வறுத்த உணவுகள், போப்பி, பால் சாப்பிடுவதை முடிந்தளவு தவிருங்கள்.
  • உடல் நலத்தைக் காக்க அக்கறை எடுப்பது போல உங்கள் மனதையும் சுகமாய் வைத்திருக்க முயன்றிடுங்கள்.

அதாவது, மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். தேவையில்லாமல் டென்ஷன் ஆகவேண்டாம்.
இவற்றை பின்பற்றிக் கொண்டு வந்தால் உங்களுக்கு வர எட்டிப்பார்க்கும் மூட்டுவலி தானாக மறைந்துவிடும்.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger