யாழ்.குருநகர் 5 மாடிக் கட்டிடத் தொகுதிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிளொன்று இனந்தெரியாத நபர்களினால் புதன்கிழமை (26) அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்றொழிலுக்கு செல்வதற்காக நண்பர் ஒருவரின் வீட்டில் நேற்று (25) இரவு மோட்டார் சைக்கிளினை விட்டுச் சென்ற மீனவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment