யாழ். சாவகச்சேரி, நுணாவில் சந்தியிலுள்ள தனியார் கட்டிடத் தொகுதியில் புதிய பொலிஸ் பரிசோதனை நிலையத்தை யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலேசேன திங்கட்கிழமை (24) திறந்துவைத்தார்.
மேற்படி பொலிஸ் பரிசோதனை நிலையமானது போக்குவரத்துப் பிரிவு, சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உள்ளிட்டவற்றை கொண்டமைந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.கே.டி.வன்னியாராட்சி தெரிவித்தார்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.கே.டி.வன்னியாராட்சி தலைமையில் நடைபெற்ற திறப்பு விழாவைத் தொடர்ந்து, பொலிஸ் அணி வகுப்பு மரியாதையை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏற்றுக்கொண்டார்.
Post a Comment