Home » , , , , » தமிழ்மொழி அடையாளப்படுத்தலுக்கு வடக்கு மாகாண சபை பணிப்பு!

தமிழ்மொழி அடையாளப்படுத்தலுக்கு வடக்கு மாகாண சபை பணிப்பு!

Written By Namnilam on Sunday, February 23, 2014 | 4:22 AM

வடக்கு மாகாண சபையின் நிர்வாக கட்டுப்பாட்டுக்குள் அடங்கும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளின் வாகனங்களில் அவர்களது பதவி பெயர்பலகை தமிழ் மொழியில் பொருத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறு சகலருக்கும் பணிப்புரை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் மூலம் வட மாகாண பிரதம செயலாளருக்கு அறிவித்துள்ளார்.


timthumb (1)


வடக்கு மாகாண சபையின் கட்டுபாட்டுக்குள் உள்ள அதிகாரிகளே தங்களது வாகனங்களில் தமது பெயர் பலகைகளை தமிழில் எழுதாது பற்றி தமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இந்த அறிவுறுத்தல் பிரதம செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதிகள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் அரசாங்க அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


சீ.வீ.கே.சிவஞானம் 
அவைத்தலைவர் 
வடக்கு மாகாண சபை

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger