Home » , , , , , » பிணக்குகளைத் தீர்க்க மதத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் – மஹாநாயக்க தேரர்!

பிணக்குகளைத் தீர்க்க மதத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் – மஹாநாயக்க தேரர்!

Written By Namnilam on Wednesday, February 26, 2014 | 6:57 PM

இரு இனங்களுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற பிணக்குகளைத் தீர்ப்பதற்கு பௌத்த-இந்து மதத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த உடுகம ரத்னபால ஸ்ரீ புத்ஹரகித மஹாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.


timthumb


யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த மஹாநாயக்க தேரர், யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளுக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தபோது, நல்லூர் ஆதீன முதல்வரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன் போது அரசியல் கைதிகளின் விடுதலை, காணிப்பிரச்சினை உட்பட்ட விடயங்கள் தொடர்பில் நல்லை ஆதீன முதல்வர் மஹாநாயக்க தேரரிடம் எடுத்துரைத்தார்.


இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த மஹாநாயக்க தேரர், ஆதீன முதல்வர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவிடம் தான் தெரிவித்திருப்பதாகவும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தி நீண்டகாலமாக நிலவிவருகின்ற பிணக்குகளைத் தீர்ப்பதற்கு பௌத்த – இந்து மதத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும், ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் பல்வேறு விடயங்களுக்கு தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger