யாழ். நாவலர் வீதியிலுள்ள உயர் கற்கைநெறிகள் கற்பிக்கும் நிறுவன கட்டிடத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் புதன்கிழமை (26) காலை நிறுவனத்தை திறந்தபோது, சடலத்தைக் கண்டு உடனடியாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.குறித்த இடத்திற்கு வந்த யாழ்ப்பாண பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment