யாழ். சாவகச்சேரி மறவன்புலோ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே இடத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை வியாழக்கிழமை இரவு (27) கைதுசெய்ததாக சாவகச்சேரி பொலிஸார் வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தனர்.
அத்துடன், மேற்படி நபர் மணல் அகழ்வதற்கு பயன்படுத்திய உழவு இயந்திரம் ஒன்றினையும் பறிமுதல் செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் குறித்த நபரை இன்று (28) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மேற்படி பகுதியில் குறித்த நபர் நேற்றிரவு (27) மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததை அவதானித்த இராணுவத்தினர், குறித்த நபரை சோதனையிட்ட போது அவர் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வது தெரியவந்தது. தொடர்ந்து இராணுவத்தினர் எமக்கு தகவல் வழங்கியதையடுத்தே, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment