யாழில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற 10 கொள்ளைச் சம்பவங்களில் 3,333,550 ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எ.நிஹால் பெரேரா இன்று (28) வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே நிஹால் பெரேரா மேற்கண்டவாறு கூறினார்.
யாழ். ஆஸ்பத்திரி வீதி, காங்கேசன்துறை வீதி, கோண்டாவில், மானிப்பாய், ஏழாலை, மூளாய் போன்ற பிரதேசங்களில் வீடுகள், கடைகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், மூதாட்டி ஒருவரின் சங்கிலியும் அறுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் சிலர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிலர் மீது புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
Home »
10 கொள்ளைச்
,
ஏ.எஸ்.பி
,
கடந்த வாரம்
,
சம்பவங்கள்
,
தாயகம்
,
யாழில்
» யாழில் கடந்த வாரம் 10 கொள்ளைச் சம்பவங்கள் - ஏ.எஸ்.பி
யாழில் கடந்த வாரம் 10 கொள்ளைச் சம்பவங்கள் - ஏ.எஸ்.பி
Written By Namnilam on Saturday, March 1, 2014 | 3:34 PM
Labels:
10 கொள்ளைச்,
ஏ.எஸ்.பி,
கடந்த வாரம்,
சம்பவங்கள்,
தாயகம்,
யாழில்
Post a Comment