யாழ்ப்பாணம் கோப்பாயில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்காகப் போராடி வருகின்றார்.
கோப்பாய் இராசபாத வீதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நல்லூர் அரசடியைச் சேர்ந்த பி.தர்மரத்தினம் என்ற வயோதிபரே உயிரந்தவராவார்.கோப்பாயிலிருந்து உரும்பிராய் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும், அச்சுவேலியிருந்து கோப்பாய் நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
Post a Comment