ஊ.பி.யு அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்ட பிரைஜைகள் குழு அங்கத்தவர்களுக்கான செயலமர்வு இன்று (01.03)வவுனியா வன்னிஇன் விடுதியில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் மனித உரிமைகள், மற்றும் ஜனநாயகம் போன்றவற்றை முன்னுரிமைப்படுத்தி இலங்கை அரசின் ஆட்சிமுறைகள் மற்றும் தந்துரோபாய செயற்பாடுகள் தொடர்பான ஒரு கருத்துப்பரிமாற்றமாகவே அமைந்திருந்தது.கலாநிதி பாக்கியம்ஜோதி சரவணமுத்து, சட்டத்தரணி எஸ்.ரி குஞ்சிகேவா இருவரும் வளவாளர்களாக கலந்து தமது வளப்பகிர்வைஜெனிவா மாநாட்டை தொட்டுச்செல்லும் வகையில் வழங்கியிருந்தனர்.
இச் செயலமர்வில் சமூகமட்ட தலைவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் சேவையாளர்கள், வர்த்தகர்கள், மற்றும் சமூகஆர்வலர்கள் உட்பட வைத்திய கலாநிதி சுபாகரனும் கலந்துகொண்டார்.
Post a Comment