சர்வதேச கிரிக்கட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணம் வென்ற இலங்கை கிரிக்ககெட் அணி வீரர்களுக்கு தலா 2.5 கோடி ரூபா பணப் பரிசு வழங்கப்படவுள்ளது. இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் ஒரே தடவையில் வீரர் ஒருவருக்கு வழங்கப்படும் மிகக் கூடிய தொகை இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது.
உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்ற பதினைந்து வீரர்களுக்கும் சமமான அடிப்படையில் பரிசுப் பணத்தொகை பகிரப்படவுள்ளது. அதேவேளை, உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கைக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசு வழங்கப்படவுள்ளது.
Post a Comment