Home » » கடற்பரப்பின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவு இலங்கைக்கும் மலேசியாவுக்கும் எச்சரிக்கை

கடற்பரப்பின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவு இலங்கைக்கும் மலேசியாவுக்கும் எச்சரிக்கை

Written By Namnilam on Wednesday, April 16, 2014 | 8:23 AM

இலங்கை மலேசியா போன்ற நாடுகள் தங்களின் கடற்பிரதேசங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவு எச்சரித்துள்ளது. இது குறித்து அவுஸ்திரேலிய புலனாய்வு துறையினர் அறிக்கை ஒன்றை வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்படி எதிர்வரும் மே மாதம் அளவில் இலங்கையில் இருந்து மீண்டும் அகதிப் படகுகள் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்தை நோக்கி பயணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை தடுக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கமும், மலேசிய கடலோர படையினரும் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கான வளங்களை அவுஸ்திரேலியா இரண்டு நாடுகளுக்கும் வழங்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger