Home » » ஆந்திராவில் மூன்று சிறுமிகளை கற்பழித்த அயோக்கியன்

ஆந்திராவில் மூன்று சிறுமிகளை கற்பழித்த அயோக்கியன்

Written By Namnilam on Monday, April 21, 2014 | 8:38 AM

ஆந்திராவில் உள்ள சொப்பனான்டி என்ற இடத்தில் செங்கள் சூளையில் வேலை செய்து வந்த மூன்று சிறுமிகளை அந்த சூளையின் உரிமையாளரான 40 வயது நபர் கற்பழித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லிங்கம்பள்ளி கிஷ்ணன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்களை வேலை செய்து வருகின்றனர்.


அக்குடும்பத்தை சேர்ந்த 13 வயது முதல் 15 வயதேயான சிறுமிகள் மூவரை அக்கொடூரன் கற்பழித்துள்ளான். இது அச்சிறுமிகளின் பெற்றோர்களுக்கு தெரிந்திருந்தும் அவர்களை வெளியே கூறாக்கூடாதென அச்சுறுத்தியதால் அமைதியாகி விட்டனர். தொடர்ந்து அக்கயவன் சிறுமிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதால், ஒரு கட்டத்தில் அரசு சாரா நிறுவனத்தை சார்ந்தவர்களிடம் முறையிட்டுள்ளனர்.


அந்நிறுவனத்தினர் இதை உதவி காவல்துறை கண்காணிப்பாளரான வேணுகோபால் ராவின் கவனத்திற்கு கொண்டுசென்றனர். உடனடியாக காவல்துறையினர் அச்செங்கல் சூளைக்கு விரைந்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் தன்னை தேடி வருவதை மோப்பம் பிடித்த அக்கயவன் அங்கிருந்து ஓடிவிட்டான். போலீசார் அவனை தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger