அரசாங்கம் நாட்டை காக்காவிட்டால் அரசாங்கத்த பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண தென்னாபிரிக்காவின் உதவியை நாடுவது தவறானது.
அரசாங்கம் இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழ முயற்சிக்கின்றது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சர்வதேச சமூகத்திற்கு அவசியமில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களில் தென்னாபிரிக்காவை மத்தியஸ்தம் வகிக்க அழைக்கக் கூடாது.
நாட்டில் நிலவி வரும் அபாயகரமான நிலைமை பற்றி அரச ஊடகங்கள் சரியான தகவல்களை வெளியிடுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். விஜயராம மாவத்தையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment