Home » » அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், எதிர்க்கட்சிகளுக்கு நகைச்சுவையாக மாறியுள்ளது, மகிந்த

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், எதிர்க்கட்சிகளுக்கு நகைச்சுவையாக மாறியுள்ளது, மகிந்த

Written By Namnilam on Monday, April 21, 2014 | 8:58 AM

அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்க்கட்சிகளுக்கு நகைச்சுவையாக மாற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சில தசாப்தங்களாக நாடு பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் பாரியளவில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.


நாட்டின் அனைத்து மக்களையும் சுபீட்சமடையச் செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும். ஆனால் எதிர்க்கட்சிகளின் குறுகிய நோக்கங்களுக்கு இடமளிக்க முடியாது.மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி பேசினால் வேலை செய்ய நேரமிருக்காது.


அபிவிருத்தித் திட்டங்களை பிரச்சாரப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம், இந்த அரசாங்கத்திற்கு கிடையாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.கிராந்துரகோட்டே பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger