Home » » தமிழக மீனவர்களை காப்பாற்றுவேன், மோடி வாக்குறுதி

தமிழக மீனவர்களை காப்பாற்றுவேன், மோடி வாக்குறுதி

Written By Namnilam on Friday, April 18, 2014 | 11:54 AM

இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களில் இருந்து தாம் தமிழக மீனவர்களை காப்பாற்றுவதாக, பாரதீயே ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி வாக்களித்துள்ளார். நேற்று இராமநாதம்புரத்தில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


குஜராத்தை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் தாக்கி வந்தனர். இது தொடர்பில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்திடம் முறையிட்டிருந்த போதும், பலவீனமான அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.


இந்த நிலையில் தாம் குஜராத் மீனவர்களை சந்தித்து அவர்களை அலங்கார மீன்பிடியில் ஈடுபடுமாறு ஆலோசனை வழங்கியதாக மோடி தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு போதிய அறிவூட்டலை வழங்கினால் அவர்களால் அலங்கார மீன்பிடியில் நலன் காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger