Home » » மகிந்தரின் பொம்மை வசந்தி அரசரட்ணம் மீண்டும் யாழ். பல்கலை துணைவேந்தர்

மகிந்தரின் பொம்மை வசந்தி அரசரட்ணம் மீண்டும் யாழ். பல்கலை துணைவேந்தர்

Written By Namnilam on Friday, April 25, 2014 | 9:02 AM

யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக மீண்டும் வசந்தி அரசரட்ணமே உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தல் 2014.03.8ம் திகதி நடைபெற்றது.


அதில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகளையும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி குணசீலன் 16 வாக்குகளையும், யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் விக்னேஷ்வரன் 13 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.


இவ்வாறு போட்டியிட்டவர்களில் அதிகூடிய வாக்குகளை பெற்ற மூவரின் பெயர்களை பல்கலைக்கழக பேரவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கும்.மானியங்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்ததுஇதில் மீண்டும் வசந்தி அரசரட்ணத்தையே ஜனாதிபதி நேற்றைய தினம் தெரிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.


இதேவேளை யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ்த் தேசியம் தொடர்பான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் மறைமுக தடைகளை ஏற்படுத்தியதோடு. கடந்த வருடம் மாவீரர் நாளை மாணவர்கள் அனுஷ்டிக்க முடியாத வகையில் நீண்ட விடுமுறையை அளித்தவர் என்று துணைவேந்தர் மீது மாணவர்கள் அதிப்தி கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger