தென்கொரியாவில் இடம்பெற்ற படகு விபத்துக்கு மகிந்த ராஜபக்ச அனுதாப செய்தியை அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பத்தினால் தாம் ஆழ்ந்த துயரை அடைந்திருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விபத்தின் சோகத்தில் இருந்து தென் கொரிய மக்கள் விரைவில் ஆறுதல் அடைவார்கள் என்று நம்புவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் வெளியாகியுள்ள செய்திகளின் படி, இந்த படகு விபத்தில் சிக்கிய 475 பேரில் 287 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. காலநிலை ஒத்துழைக்காமையால் தேடுதல் பணிகளும் மந்த நிலையிலேயே இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment