கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற இந்திய அரசின் நிதியுதவியுடனான 8இ350 வீடுகளில் ஈ504 வீடுகள் இது வரை கட்டி முடிக்கப்பட்டுள்ளன என மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவித்தன. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, புநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 41 ஆயிரத்து 227 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.
மீள்குடியேறியவர்களுக்குப் பல்வேறு திட்டங்களூடாக நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் விதத்தில் 8,350 வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் கண்டாவளைப் பிரதேசத்தில் 540 வீடுகளும் கரைச்சி பிரதேசத்தில் 1914 வீடுகளும் பூநகரிப் பிரதேசத்தில் 768 வீடுகளும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 283 வீடுகளும் என 3,504 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் 2,636 வீடுகளின் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருகின்றன எனவும் 2,210 வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவு இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது
Post a Comment