Home » » ஷாருக்கானின் ஆதரவுக்கு நன்றி, காம்பீர் நெகிழ்ச்சி

ஷாருக்கானின் ஆதரவுக்கு நன்றி, காம்பீர் நெகிழ்ச்சி

Written By Namnilam on Friday, May 30, 2014 | 2:08 PM

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐ.பி.எல் குவாலிபையர் சுற்றில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி பலமான பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெற்றி பெற்ற பின்னர் பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் கூறுகையில் “இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முழு காரணமும் எங்கள் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தான். அவர் தான் எங்களுக்கு போதிய ஆதரவும் ஊக்கமும் தந்து எங்களை வழி நடத்தினார். இத்தொடரின் தொடக்கத்தில் நான் ஒழுங்காக விளையாடாமல் பல முறை ஆட்டமிழந்த போது ஷாருக்கான் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். நாளை பஞ்சாப்பிற்கும் சென்னைக்கும் நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger