கால்பந்து மூலமாக தான் பிரேசில் என்ற நாடு இருப்பது அனைவருக்கும் தெரியவந்தது என்று கால்பந்து ஜாம்பவான் பீலே கூறியுள்ளார்.
நாளை உலகமே எதிர்பார்க்கும் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் தொடங்கவுள்ளன.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் மோதும் அணிகள் பற்றி தான் ரசிகர்களிடையே ஒரே பேச்சாக இருக்கும்.
இது பற்றி பீலே கூறுகையில், 1950ல் நடந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் உருகுவேயிடம் பிரேசில் தோற்றதற்கு இந்த ஆண்டு இறுதிப்போட்டியில் அந்த அணியை பிரேசில் பழி தீர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.
அந்த காரணத்தால் நான் பிரேசிலும், உருகுவேவும் தான் இறுதிப்போட்டியில் மோத வேண்டும் என்று நினைப்பேன்.
மேலும் பிரேசில் என்ற நாடு குறித்து பலருக்கும் தெரியாது. பிரேசில் என்ற ஒரு நாடு உள்ளது என உலக மக்களுக்கு தெரியவந்ததே கால்பந்தாட்டங்களால் தான்.
எனவே பிரேசிலின் பெருமைக்கு கால்பந்து தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.
Post a Comment