விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் மலேசியாவில் கைதான மூவரையும் இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளதாக அந்நாட்டின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பி.பி.ஸி. செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தமது தொடர்புகள் மூலம் இவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்ததாக, தனது பெயரை வெளியிடாத அந்த அதிகாரி கூறியுள்ளார். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு நிதி சேகரித்தல், பிரச்சாரம் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டனர் என்றும் இவர்கள் மலேசியாவில் உரிய விசா மற்றும் ஆவணங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக தங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் கைதானவர்களை விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளதாகவும் இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். குறித்த சந்தேகநபர்கள் கடந்த 15 ஆம் திகதி மலேசியப் பொலிஸாரால் சிலாங்கூர் பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment