வடக்கு மாகாண சபையைக் கண்டித்து யாழ்.மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 8 மணி தொடக்கம் இடம்பெற்று வருகின்றது. செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரதேச சபைகளில் இருந்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சுகாதாரத் திணைக்களத்துக்கு மாற்றப்படனர். இவர்கள் மீண்டும் உள்ளூராட்சி சபைகளுக்கு நியமனம் பெற வேண்டும் என்பதே அவர்களின் வலுவான கோரிக்கையாகவுள்ளது.
Post a Comment