ரயில் பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக வடக்கு ரயில் மார்த்தில் போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்கள் சிலவற்றின் பயணங்கள் இன்றைய தினம் இரத்து செய்யப்பட்டுள்ளன.இன்று காலை 6.20 க்கு மாத்தறையில் இருந்து பளை வரையிலும், காலை 6.50 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து பளை நோக்கியும் புறப்படவிருந்த ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.
இதுதவிர கோட்டையில் இருந்து பளை வரை இன்று பிற்பகல் 2.45 க்கு புறப்படவுள்ள ரயில் போக்குவரத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
Post a Comment