எவரேனும் த.தே.கூ வுடன் அரசியல் தொடர்புகள் வைத்திருந்தாலோ அன்றி அரசியல் காரணங்களுக்காக அவர்களை சந்தித்தாலோ, அவர்களின் வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சொல்வதை முன்னெடுக்க வேண்டும் எனவும் பொது மக்களிடம் பேசிப்பார்த்தபோது இது தான் அவர்களின் பார்வை எனவும் டெய்லி நியூஸ் இன்றய தனது முக்கிய செய்தியில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
த.தே.கூ வின் அண்மைய திருகோணமலைக் கூட்டத்தில் திரு விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கிலிருந்தான இராணுவ வெளியேற்றத்திற்கு த.தே.கூ அதிமுக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஏனெனில் இராணுவப்பிரசன்னம் வடக்கிற்கும் இந்தியாவிற்கும் அச்சுறுத்தலாக அமைவதாகவும் அரசாங்கம் தமிழ்மக்களினால் எல்லா வழிகளிலும் நல் அபிப்பிராயத்தை பெறுவதிலிருந்து நிராகரிக்கப்பட்டதாகவும், அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுத்தே ஆகவேண்டுமென்றும், வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டுமென்றும் இப்படைப்பிரசன்னம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலெனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அரசாங்கத்தால் அமைப்புகள் மீதும் தனிப்பட்ட்டவர்கள் மீது அண்மையில் கொஉவரப்பட்ட தடை உத்தரவு விலக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்..எதிர்காலத்தில் த.தே.கூ வினை சந்திக்கவுள்ள அனைத்து அரசியல் பிரமுகர்களிடமும் இதனை வலியுறுத்தவுள்ளதகவும் இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லையெனவும் அக்கூட்டத்தில் தெரிவித்தார்.
இதுவே த.தே.கூ இன் தெளிவான கொள்கை எனவும் அவர் தெரிவித்ததாகவும் வெளி நாட்டு சர்வதேச விசாரணைகளும் அவர்காளின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது
Post a Comment