ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் இரவு நேர களியாட்ட விடுதியில் இருந்துள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு பீ.ஆர்.சி விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் இந்த இரவு நேரடி களியாட்ட விடுதியில் இவர்கள் இருந்ததை பலர் கண்டுள்ளனர். ஹரின் பெர்ணான்டோவும் ஹிருணிக்காவும் நள்ளிரவு ஒரு மணி வரை அங்கு இருந்ததுடன் இருவரும் மிக நெருக்கமாக காணப்படடதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி களியாட்ட விடுதியில் இருந்தவர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டதாக தெரியவருகிறது. ஹிருணிக்கா பிரேமச்சந்திர கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்று தெரிவானார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், அண்மைய காலத்தில் இரண்டு பிரதான கட்சிகளின் முக்கிய நபர்களாக மாறியுள்ள இவர்கள் இருவரும் இரவு நேர களியாட்ட விடுதியில் சந்தித்து கொண்டமை குறித்து அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Post a Comment