உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பட்டியலை, இலங்கை அரசாங்கம் மீளமைப்பு செய்யவுள்ளது. இதன்படி நீண்ட காலமாக இடம்பெயர்ந்த நிலையில் உள்ள 400 குடும்பங்கள் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளன. தற்போதைய பட்டியலின்படி 7094 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தமாக 23ஆயிரத்து 568 பேர் உள்ளடங்கியுள்ளனர். இவர்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள 32 நலன்புரி நிலையங்களிலும் மூதூரிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் அரச சார்பற்ற அமைப்புக்களின் புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 93 ஆயிரம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளார்கள் என்ற தகவலை அமைச்சு மறுத்துள்ளது. இருந்த போதும் மேலும் 14 ஆயிரம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்த பட்டியலில் இணைக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment