வெலிவேரிய, ரத்துபஸ்வெல பகுதியில் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பொது மக்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு நியாயப்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேவையின்றி இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டமையும், இராணுவத்தினர் பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியமையும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பில் விசாரணை நடத்திய இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு, தமது அறிக்கையை இறுதி செய்துள்ளது. இதில் இராணுவம் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமது வரையறைக்குள்ளேயே செயற்பட்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கை இராணுவ தளபதி மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment