இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு தூதுக் குழு புதன்கிழமை(7) யாழிற்கான விஜயத்தை மேற்கொண்டது. இக்குழுவில் இந்தியா, சவூதி அரேபியா, ஜேர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான தூதுவர்கள் வருகை தந்துள்ளனர்.
யாழ். பொதுநூலகம், கோட்டை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை உட்பட பல இடங்களை பார்வையிடவுள்ளதுடன், போரின் பின்னரான யாழின் அபிவிருத்தி நிலமைகள் குறித்தும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் கலந்துரையாடவுள்ளனர்.
Post a Comment