Home » » கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உட்பட நான்கு மாணவர்கள் கைது

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உட்பட நான்கு மாணவர்கள் கைது

Written By Namnilam on Sunday, May 4, 2014 | 8:14 AM

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உட்பட நான்கு மாணவர்கள் பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவிரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புவிகுமார், மணிவண்ணன், திருக்குமரன், கோமகன் ஆகிய நால்வருமே இன்று ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்தத் தடையையும் மீறி அத்துமீறி பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசித்தமை முதலிய காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


இதேவேளை சமாதானத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் கூட்டங்களைக் கூட்டியமை என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த நால்வரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger