ரஜினியின் புதிய படமான, “லிங்காவின் படப்பிடிப்பை நடத்த, மைசூரு அரண்மனை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. “கோச்சடையான் படத்துக்கு பின், “லிங்கா என்ற படத்தில், ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள புகழ்பெற்ற அரண்மனையில் நடப்பதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், மைசூரு அரண்மனை வாரியத்தின் உதவி இயக்குனர் சுப்ரமண்யா கூறியுள்ளதாவது: “லிங்கா படத்தின் இயக்குனர், ஒரு மாதத்துக்கு முன், அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டார்.
ஆனால், அரண்மனையின் பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பிரச்னைகளை கருத்தில் வைத்து, படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்து விட்டோம். கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்த, “மயூரா படத்தின் படப்பிடிப்பு, அரண்மனைக்குள் நடத்தப்பட்டது.
அதன்பின், வேறு எந்த படத்துக்கும் அரண்மனையில் அனுமதி தரப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார். இதையடுத்து, “லிங்கா படப்பிடிப்பை மைசூரில் உள்ள, லலிதா மஹால் பேலஸ் என்ற ஓட்டலில் நடத்த, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Post a Comment