பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரை உடுவில் பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுவினர் நேற்று மடக்கிப் பிடித்தனர். களவாகத் தேங்காய் திருடும் போதே அவர் சிவில் பாதுகாப்பு குழுவிடம் மாட்டினார்.
இணுவில் பகுதியைச் சேர்ந்த 18 வயதான குறித்த இளைஞன் 19 வயதுடைய யுவதி ஒருவருடன் இணைந்து, உடுவில் அம்பலவாணர் வீதியில் உள்ள சனநடமாட்டம் இல்லாத காணியில் உள்ள தென்னை மரங்களில் தேங்காய் பிடுங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதி சிவில் பாதுகாப்புக் குழுவினர் சந்தேகத்தின் பெயரில் அவர்களை மடக்கி பிடித்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளைஞரிடம் இருந்து தங்கநகைகளை வங்கியில் அதிகமாக அடகுவைத்த பற்றுச் சீட்டுக்களையும், பதிவு இல்லாத மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். தற்போது மேலதிக விசாரணை களைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தேங்காய் திருடும் போது மாட்டிக் கொண்ட இளைஞன்
Written By Namnilam on Friday, May 2, 2014 | 12:36 PM
Labels:
தாயகம்
Post a Comment