Home » » சிவபெருமானுக்கு காணிக்கையாக நாக்கை அறுத்த வாலிபர்

சிவபெருமானுக்கு காணிக்கையாக நாக்கை அறுத்த வாலிபர்

Written By Namnilam on Thursday, May 8, 2014 | 5:43 PM

ஜார்கண்ட் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் நாக்கை பிளேடால் அறுத்து காணிக்கை செலுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தூகடாவில் உள்ள மகாதேவ்கர்ஹா என்ற சிவபெருமான் கோவிலுக்கு வந்த லால் மோகன் சோரன் என்ற 17 வயது இளைஞர் சிவபெருமான சந்நிதி முன்னால் பிளேடு ஒன்றை எடுத்து திடீரென தனது நாக்கை அறுத்து ஒரு பாத்திரத்தில் பிடித்து காணிக்கை செலுத்தியுள்ளார்.


இதனையடுத்து, அவர் எழுதி வைத்து இருந்த ஒரு குறிப்பில் நான் எனது நாக்கை அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்துகிறேன்.தயவு செய்து என்னை கோவிலை விட்டு வெளியே அனுப்பி விடாதீர்கள்.


உடனடியாக கோவில் நிர்வாகி லால்மோகன் சோரனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் மீண்டும் அந்த இளைஞனுக்கு நாக்கை ஒட்ட வைக்க முடியவில்லை.


இதனையடுத்து, தற்போது வெறும் திரவ உணவு மட்டும் சாப்பிட்டு வரும் லால்மோகன் சோரன் வாய்பேச முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. லால் மோகன் சோரன் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி அடைந்தாலும், தன்னுடைய மகன் கடவுளுக்கு கொடுத்த காணிக்கையை எண்ணி பெருமைப்படுவதாக கூறியுள்ளனர்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger