Home » » தோஷம் கழித்த சாமிக்கு விளக்கமறியல்

தோஷம் கழித்த சாமிக்கு விளக்கமறியல்

Written By Namnilam on Thursday, May 8, 2014 | 1:50 PM

தோஷம் கழிக்க சென்ற 31 வயதான யுவதியை உதவியாளர் கொண்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சாமி என்றழைக்கப்படும் பூசாரியை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பிரதான நீதவான் புதன்கிழமை உத்தரவிட்டள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


நோய்க்கு நிவாரணம் பெறுவதற்காக குறித்த யுவதி தனது தாயார் மற்றும் நண்பியுடன் களுமடையிலுள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.


யுவதியை சோதித்த பூசகர் நோயை குணப்படுத்துவதற்கு 10 ஆயிரம் ரூபா தேவையென்று கூறியுள்ளார்.
அவ்விருவரும் என்னசெய்வதென்று திகைத்து நின்றுகொண்டிருக்கையில். அந்த பணத்தை எடுத்துவரும்வரையிலும் யுவதியை தேவாலயத்திலேயே விட்டுச்செல்லுமாறு பூசாரி அறிவுரை கூறியுள்ளார்.


பூசாரியின் பேச்சை நம்பிய அந்த யுவதியின் நண்பி மற்றும் தாயார் யுவதியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அதன் பின்னர் யுவதியை அண்டியுள்ள தோஷத்தை கழிப்பதாக கூறி அவரை நிர்வாணமாக்கி ஏதோவொரு தூள்களை அந்த யுவதியின் உடம்பில் பூசாரி தூவியுள்ளார்.


அதன்பின்னர் உதவியாளரை கொண்டு யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் அதனை பூசாரி பார்த்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்த யுவதிக்கு பல்வேறு வகையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார், நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Nam Nilam - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger