ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கடந்த மூன்று வருடங்களாக இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஊடக சுதந்திரத்தினை இலங்கை அரசு மதிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளபோதும் ஊடக அடக்குமுறை தொடர்கிறது. கடந்த 30 வருடங்களில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்களில் ஒரேயயாரு கொலையில் மட்டுமே சந்தேக நபரைக் கைது செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் 'உதயன்', 'சுடர் ஒளி' பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநருமான ஈ.சரவணபவன். சிவராம் ஞாபகார்த்த மன்றத்தின் ஏற்பாட்டில் சுவிஸில் நடைபெற்ற சிவராம் நினைவுப் பேருரையில் 'சிறிலங்காவில் தமிழ் ஊடகங்களும் ஊடகர்களும் எதிர்நோக்கும் சவால்கள் - சர்வதேச பங்களிப்பு' என்ற தலைப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடக சுதந்திரத்தினை இலங்கை அரசு மதிக்கவேண்டும், சரவணபவன் எம்.பி
Written By Namnilam on Monday, May 12, 2014 | 1:36 PM
Labels:
தாயகம்
Post a Comment